நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் மழை

- ஒரு சில இடங்களில் 100 மி. மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி
- மேல், காலி, மாத்தறை மாவட்டங்களில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி
- ஊவா, அம்பாறை, மட்டக்களப்பில் மாலையில் மழை

இன்றைய தினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
  
மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.  

வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகிறது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும்  வடமத்திய மாகாணத்திலும், அம்பாந்தோட்டை, புத்தளம், மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45  கி.மீ.  வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்  வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள்  அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Add new comment

Or log in with...