Tuesday, June 6, 2023 - 5:50pm
கிளிநொச்சி நீர் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆரம்ப நீச்சல் பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சியை சேர்ந்த எட்டு பாடசாலைகளின் 100 மாணவர்களுக்கு ஆறு நாள் நீச்சல் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் முழுமையாக பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி றோட்ரிக்கோ விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தில் கிளிநொச்சி நீர் விளையாட்டுக் கழகத்தினால் இந்த நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.
கிளிநொச்சி குறூப் நிருபர்
Add new comment