Tuesday, May 9, 2023 - 12:42pm
கடந்த வருடம் மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் நிட்டம்புவ நகர மையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் நினைவாக இன்று (09) பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா விடுத்த கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதேவேளை, ஊழல் ஒழிப்பு சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவின் பிரதி தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இதன்போது தெரிவித்தார்.
Add new comment