22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நிபந்தனையுடன் ஆதரவு

நிபந்தனைகளுடன் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் ஆரம்பமானதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை அரசாங்கம் விடுவிக்க வேண்டுமென, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...