வட மாகாண முன்னாள் அமைச்சர் ஜீ.குணசீலன் பயணித்த கார் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
குறித்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளது.
மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஜீ. குணசீலன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் இடம்பெற்றது.
குறித்த மருத்துவ முகாம் நிறைவடைந்த நிலையில் நானாட்டானில் இருந்து பயணிக்கும் போதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தின்போது வாகனத்தின் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.எனினும் குறித்த வாகனத்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
முருங்கன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
(மன்னார் குறூப் நிருபர் - எஸ்.றொசேரியன் லெம்பேட்)
Add new comment