Wednesday, January 26, 2022 - 6:42pm
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படவுள்ள, மாகாண மட்டத்திலான 28 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட போட்டித்தொடருக்கான கிழக்குமாகண அணிக்கான வீரர்கள் தெரிவில்இறுதி 30 பேர் கொண்ட கிழக்குமாகண அணியில் அம்பாறை உதைபந்தாட்ட லீக்கில் இருந்து கல்முனை சனி மெளன்ட் விளையாட்டுக் கழக அணி வீரர்களான, எ.எஸ்.எம். ரில்வான், எ.ஆர்.எம். பிரோஸ் ஆகிய 2 வீரர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
கிழக்குமாகண அணி இறுதி கட்ட தெரிவுக்கு மாகாணத்தில் இருந்து 90 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சவளக்கடை குறூப் நிருபர்
Add new comment