மின் விநியோகத்தில் தடையை ஏற்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

மின் சக்தி அமைச்சர் காமினி எச்சரிக்கை

பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் மின் விநியோகத்தை தடை செய்யும் நோக்கில் செயற்படும் மின்சார சபை தொழிற் சங்கத்தினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன்,  இனி மின் விநியோகம் தடைப்படாது என்பதை பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மின்சக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மின்னுற்பத்தி மற்றும் மின் விநியோகத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு தேவையான 50 மில்லியன் டொலரை வழங்குமாறு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மத்திய வங்கி தேவையான டொலரை விநியோகிக்க உரிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதென்றும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...