Wednesday, November 17, 2021 - 12:16pm
NMRA தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட Epic Lanka Technologies நிறுவனத்தின் மென்பொருள் பொறியியலாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில் கைதான் சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சந்தேகநபர் இன்று (17) முற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
34 வயதான குறித்த சந்தேகநபர், கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி திவுலபிட்டி, வல்பிட்ட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.