ஊடகவியலாளரை CIDக்கு அழைப்பதை தவிர்க்கவும்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆலோசனை வழங்கல்

ச.தொ.ச வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்க மேற்கொண்ட தீர்மானத்தை இனி நடைமுறைப்படுத்த வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தாம் கவலை அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் வெளியான அறிக்கை தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக ஊடகவியலாளர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்க திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.