Friday, August 27, 2021 - 6:00am
அரசிடம் ரணில் விசேட கோரிக்கை
தற்போது நாடு முடக்கப்பட்டுள்ளதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நாட்டை தொடர்ந்து முடக்குமாறு அரசாங்கத்திடம் விசேட கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் வாரத்தில் நாட்டை தொடர்ந்து முடக்கி வைப்பது குறித்து தீர்மானமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையிடம் ரணில் விக்கிரமசிங்க பரிந்துரை செய்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment