சீனாவில் கொரோனா பரவல் தீவிரம்: பல நகர்கள் முடக்கம்

சீனாவில் கடந்த பல மாதங்களில் இல்லாத மிகப்பெரிய கொரோனா தொற்று பரவல் சம்பவம் ஏற்பட்டிருக்கும் நிலையில் பாரிய அளவில் சோதனை மேற்கோள்ளப்பட்டு பயணக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருப்பதோடு மில்லியன் கணக்கான மக்கள் வீடுகளில முடங்கியுள்ளனர்.

சீனாவில் வேகமாகப் பரவக் கூடிய டெல்டா வைரஸ் திரிபும் 20 நகரங்கள் மற்றும் ஒரு டஜனுக்கும் அதிகமான மாகாணங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. நேற்று திங்கட்கிழமை உள்நாட்டில் தொற்றிய 55 புதிய சம்பவங்கள் பதிவாகின.

பீஜிங் உட்பட பிரதான நகரங்களின் உள்ளூர் நிர்வாகங்கள் மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்களிடம் கொரோனா தொற்று சோதனை செய்ய ஆரம்பித்துள்ளன. குடியிருப்பு வளாகங்களை சுற்றிவளைத்தல் தனிமைப்படுத்தலின் கீழ் நெருங்கிய தொடர்புகளை கட்டுப்படுத்தல் போன்ற கடும் நடவடிக்கைகளிலும் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.


Add new comment

Or log in with...