பதுக்கி வைக்கப்பட்டிருந்த 201 மதுபான போத்தல்கள் மீட்பு

போயா தினத்தில் கூடுதலான விலைக்கு விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 201 மதுபான போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மாத்தளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது.

அல்வத்த பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 201 மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரும் மாத்தளை குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை சுழற்சி நிருபர்

 

Add new comment

Or log in with...