பாராளுமன்ற உறுப்பினராக பசில் இன்று சத்தியப்பிரமாணம்

பொருளாதார விவகார அமைச்சராகவும் பதவியேற்பார்

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ஷஇன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்யவுள்ளார். அத்துடன் இன்றைய தினமே அவர் பொருளாதார விவகாரம் தொடர்பிலான அமைச்சினை பொறுப்பேற்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கிய வர்த்தமானியை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று புதன்கிழமை வெளியிட்டது.

பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஜயந்த கெட்டகொட நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்‌ஷவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.  இதற்கமைய பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்‌ஷ இன்று  தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நாட்டிலுள்ள 10,155 பாடசாலைகளைச் சேர்ந்த அனைத்து கல்விசார், கல்விசாரா ஊழியர்களுக்கு இவ்வாறு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என கல்வியமைச்சர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...