Monday, November 30, 2020 - 11:18am
சட்டவிரோதமாக படகு ஒன்றின் மூலம் இந்தியாவிற்கு செல்ல முயன்ற ஏழு மன்னார் வாசிகளை பேசாலை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மன்னாரைச் சேர்ந்த ஐந்து பேரும் அவர்களோடு 02 கடத்தல்காரர்களும் மன்னார் பேசாலை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 வயது இளைஞர், 29 வயது யுவதி, 38 வயதான பெண்ணொருவர் மற்றும் 8 ,9 வயதுடைய இரண்டு பிள்ளைகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
32 மட்டும் 37 வயதான பேசாலை பகுதியைச் சேர்ந்த ஆட்கடத்தலில் ஈடுபடும் இரண்டு பேரும் அவர்களுள் உள்ளடங்குவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment