ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5000 ரூபா

02 ஆம் கட்டம் நாளை செவ்வாய் ஆரம்பம்

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தின் 02ஆம் கட்ட நடவடிக்கைகளை நாளை முதல் ஆரம்பிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு அமைய கம்பஹா மாவட்டத்தில் 4,64,254 குடும்பங்களுக்கு 5000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காக அரசாங்கத்தினால் 2,321,270,000 ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...