பாதுகாப்பு அங்கி அணிந்து பாராளுமன்றம் வந்த ரிஷாட்

சிறையில் கொரோனா அச்சுறுத்தல் காரணம்;

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், கொரோனா தொற்று தடுப்புக்கான பிரத்தியேக பாதுகாப்பு உடையுடன் பாராளுமன்றத் துக்கு நேற்று அழைத்து வரப்பட்டார். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் நிலைமையின் காரணமாகவே இவ்வாறு பிரத்தியேக பாதுகாப்பு உடையுடன் பாராளுமன்றத்துக்கு அவர் அழைத்து வரப்பட்டார்.

ரிஷாட் பதியுதீனை பாராளுமன்றத்திற்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டுமென நேற்று முன்தினம் ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் வலியுறுத்தியபோதும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதனால் அவருக்கு அனுமதி வழங்க முடியாதென சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டதாக சபாநாயகரினால் தெரிவிக்கப்பட்டது.

 


Add new comment

Or log in with...