ரிஷாட்டை வலைவீசி தேடிவரும் பொலிஸார்

ஐந்து நாட்களாக பொலிஸாரிடம் அகப்படாமல் தலைமறைவு;

கிழக்கு மாகாணத்தில் சி.ஐ.டி.யினர் பலமுனை தேடுதல்

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சி.ஐ.டி.யின் விசேட குழுவினர் நேற்று கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை உட்பட பல பகுதிகளில் ரிசாட் பதியுதீனின் நெருங்கிய சகாக்களின் வீடுகளில் சி.ஐ.டி.யினர் தேடுதலை மேற்கொண்டுள்ளனர். அம்பாறையில் உள்ள ரிசாட் பதியுதீனின் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கும் சி.ஐ.டி.யினர் சென்றுள்ளனர். முன்னாள் அமைச்சரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் சி.ஐ.டி.யின் ஆறு குழுக்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...