வாகனத்திற்கு வழி விட்டபோது விபத்து; இந்தியர் பலி

ஹோமாகமவில் இடம்பெற்ற விபத்தில் இந்திய பிரஜை ஒருவர் பலியாகியுள்ளார்.

இவ்விபத்து நேற்று (26) சம்பவித்துள்ளது.

ஹோமாகம கைத்தொழிற்பேட்டையிலள்ள தனியார் நிறுவனமொன்றினால் அகற்றப்பட்ட இரும்புத் துண்டுகளை எடுத்துச் செல்வதற்கு வந்த லொறியொன்று, குறித்த நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு வாகனம் பயணிப்பதற்கு இடம் விட்டுக்கொடுக்க முயன்றபோது, சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பின்னால் சென்று குறித்த நபர் மீது மோதியுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர், சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

40 வயதான இந்திய நாட்டவர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

இவரது சடலம், ஹோமாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Add new comment

Or log in with...