இன்று முதல் திங்கள் வரை மழை அதிகரிக்கும்

- நாடு முழுவதும் காற்றுடனான நிலை

நாடு முழுவதும் காற்று நிலைமையும்நாட்டின் தென்மேற்குபகுதிகளில் மழையுடனான வானிலையும் இன்று (18) முதல் 21ஆம் திகதி வரை தற்காலிகமாக சற்று அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவானபலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல்மாகாணத்தில் அவ்வப்போதுசிறிதளவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல்2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்குசரிவுப்பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.                                                       


Add new comment

Or log in with...