Thursday, September 10, 2020 - 10:51am
வெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்துவ பாலத்திற்கு அருகிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் உறவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஹோகந்தரயைச் சேர்ந்த 74 வயதுடைய ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர், தனது வீட்டிலிருந்து எவருக்கும் எதுவும் கூறாமல் புறப்பட்டுச் சென்றிருந்ததாக, உயிரிழந்தவரது மகனினால் அன்றையதினம் தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Add new comment