நிட்டம்புவ கோர விபத்தில் இருவர் பலி

கொழும்பு - கண்டி பிரதான வீதி, நிட்டம்புவ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்கவிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்ஸொன்று எதிர்த்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன்  நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்தில் கலேன்பிதுணுவெவ பகுதியைச் சேர்ந்த ஹினால் குமார மற்றும் பிரசன்ன சிசிற குமார எனும் 37 மற்றும் 33 வயதான இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் தனியார் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Add new comment

Or log in with...