தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் நேற்று அதிகாலை திடீர் தீ விபத்து

- வீட்டுக்கு பலத்த சேதம்  உடைமைகள் எரிந்து நாசம்
- நாசகார வேலையா? விசாரணை தொடர்கிறது 

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கொத்மலை - வேவன்டனிலுள்ள பூர்வீக இல்லத்தில் நேற்று அதிகாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.30அளவில் ஏற்பட்ட இத் தீ அனர்த்தத்தில் வீட்டின் கூரை உட்பட வீட்டின் பெறுமதிவாய்ந்த உடைமைகள் பல முழுமையாக சேதமடைந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.  

நுவரெலியா தீயணைப்பு படைப்பிரிவுக்கு சொந்தமான தீயணைப்பு வாகனத்தை பயன்படுத்தி, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆறுமுகன் தொண்டமானின் புதல்வனான, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், செந்தில் தொண்டமான் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருந்தனர்.  

இத் திடீர் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையென்றும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொத்மலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். தீ அனர்த்தம் காரணமாக, வேவன்டண் இல்லத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பல உடமைகளும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஹற்றன் சுழற்சி நிருபர்   


Add new comment

Or log in with...