Tuesday, August 4, 2020 - 2:12pm
மடுத் திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் எதிர்வரும் வியாழக்கிழமை 6ஆம் திகதி மாலை 5.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
மடுத் திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளாரின் தலைமையில் கொடியேற்ற நிகழ்வு இடம் பெறவுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து தினமும் நவ நாள் ஆராதனைகள் மற்றும் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்படும்.
எதிர் வரும் 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் நடைபெறும்.
ஆயர்கள் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.
Add new comment