கொவிட்-19; இதுவரை 892 கடற்படையினர் குணமடைவு

- மேலும் 13 பேர் மாத்திரம் சிகிச்சை

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 04 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (07) வெளியேறியுள்ளனர்.

இக்கடற்படையின் மினுவாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவ்வப்போது PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் அவர்களது உடலில் மேலும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் குறித்த வைத்தியசாலையிலிருந்து நேற்று வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொவிட்-19 தொற்றினால் குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 892ஆக உயர்வடைந்துள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்கடற்படையினர் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, அவர்களை மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

‍கொவிட்-19 தொற்றுக் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மொத்த கடற்படையினரின் எண்ணிக்கை 905 ஆகும். அவர்களில் 13 பேர் மாத்திரமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...