அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (19) இரவு 7.00 மணியளவில் அம்பாறை - கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இத்துப்பாக்கி சூட்டில் மரணமானவர் யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் மத்தி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கே. கமலராஜ் என்ற அரச புலனாய்வு உத்தியோகத்தராவார்.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தர், இன்று பிற்பகல் 6.30 மணியளவில் காரியாலயத்தில் தனிமையில் இருந்துள்ள நிலையில், கடமைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியின் மூலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.
பாறுக் ஷிஹான்
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்
தேசிய மனநல உதவி இலக்கம் 1926
இலங்கை சுமித்ரயோ 011 2696666
CCC line 1333
Add new comment