Monday, June 1, 2020 - 12:40pm
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் யோசனைகள் முன்வைப்பு
நாட்டில் இரண்டாம் கட்ட கொரோனா வைரஸ் தாக்கம் உருவாவதை தவிர்த்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது முக்கியம் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் மீண்டும் இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது கட்ட நோய் பரவல் உருவாகலாம் என்றும் அதனை தவிர்த்துக் கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அரச அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment