இவ்வருடம் இதுவரை 20 டெங்கு நோயாளர்கள் பலி

- கொரோனா வைரஸினால் 10 பேரே மரணமடைந்துள்ளனர்
- கடந்த வருடம் 150 பேர் டெங்கினால் மரணம்

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 20 டெங்கு நோயாளர்களும், கடந்த வருடத்தில் 150 டெங்கு நோயாளர்களும் உயிரிழந்துள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 நோயினால் இதுவரை 10பேரே மரணமடைந்துள்ளனர்.

கொவிட்-19 வைரஸிலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுவது போன்று, டெங்கு நோயிலிருந்தும் பொதுமக்களை பாதுகாக்கும் பொறுப்பு  தமக்கு உரியது என்றும், அதனாலேயே ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, ‘டெங்கு ஒழிப்பு செயற்பாட்டு செயலணி’ அமைக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மைய்யத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “உங்களது சுற்றுச்சூழலை சுத்தமாக  வைத்திருத்தல்,  உங்களை சுற்றியுள்ள கட்டடங்களை சுத்தமாக வைத்திருத்தல் உங்களுடைய பொறுப்பாக எண்ணி செயற்படுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.  


Add new comment

Or log in with...