த பினான்ஸ் நிறுவனம் மூடப்பட்டதால் பணம் வைப்பிலிட்டவர்கள் ஆர்ப்பாட்டம்

த பீனான்ஸ் நிதி நிறுவனம் மத்திய வங்கியினால் மூடப்பட்டதையடுத்து நீர்கொழும்பு கிளையில் பணம் வைப்பிலிட்டவர்கள் நேற்று முன்தினம் நீர்கொழும்பு த பீனான்ஸ் முன்பாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாசகங்களை கொண்ட சுலோகங்களை ஏந்தியபடி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மதியவங்கி அனுமதி அளித்த நிதிநிறுவனம் என்றபடியாலும் 80 வருடங்கள் நாட்டில் பெயர்கொண்ட நிதி நிறுவனம் என்றபடியாலுமே நாங்கள் கஷ்டப்பட்டு சேகரித்த பெருந்தொகையான பணத்தை இங்கு வைப்பிலிட்டோம். எங்கள் பணத்துக்கு மதியவங்கியும் அரசாங்கமுமே பொறுப்பு கூறவேண்டும். அரசாங்கம் எங்கள் பணத்தை உடனடியாக மீட்டு தரவேண்டும் அல்லது எங்களுக்கு வீதியில் இறங்கி உயிரைவிடுவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தனர்.

நீர்கொழும்பு நிருபர்


Add new comment

Or log in with...