முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பின் தேராவில் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து, கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (25), புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர்புரம் கிராம இளைஞர்களுக்கும் தேராவில் கிராம இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டாக மாறியுள்ளது.
இவ்வாள்வெட்டு சம்பவத்தின்போது தேரவில் பகுதியினை சேர்ந்த ம. ஞானப்பிரகாசம் (26) என்ற இளைஞனே வெட்டுக்காயத்திற்கு இலக்கான நிலையில், மூங்கிலாறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கிளிநொச்சி மாவட்ட தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
(புதுக்குடியிருப்பு நிருபர் - முல்லைகீதன்)
Add new comment