குணமடைந்த கடற்படையினர் எண்ணிக்கை 204 ஆக உயர்வு

கொவிட் -19 தொற்றுக்குள்ளாகி, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 15 கடற்படையினர், பூரண குணமடைந்த நிலையில் நேற்று (17)  வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதற்கமைய இந்நோயினால் குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 204ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் 05 பேர் கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையிலும், 05 பேர் ஹோமாகம  வைத்தியசாலையிலும், 04 பேர் முல்லேரியா வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் IDH வைத்தியசாலையிலும், சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கமைய, அவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் மூலம் குறித்த வைரஸ் தொற்று அவர்களுக்கு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதால் அவர்கள் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இவ்வாறு குணமடைந்த 15 கடற்படையினர் உட்பட, கொவிட் -19 நோய் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்த 204 கடற்படையினர் இதுவரை வைத்தியசாலைகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளவர்களை, சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய  மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 


Add new comment

Or log in with...