மகாவலி ஆற்றிலிருந்து வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்டார்

மகாவலி ஆற்றிலிருந்து வயோதிப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்

நாவலப்பிட்டி மாகும்புர பிரதேசத்தை சேர்ந்த  ஐந்து பிள்ளைகளின் தாயான கே.வெள்ளையம்மா (88) என்பவரே இன்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட வயோதிப பெண் நேற்று (13)  வெற்றிலை வாங்கி வருவதாக கூறி விட்டு வீட்டிலிருந்து வந்தவராவார். அவர் மகாவலி ஆற்றை ஊடறுத்து செல்லும் ரயில் பாலத்தில் நடந்து செல்கையில் தவறி ஆற்றில் வீழ்ந்திருக்கலாம் என, பொலிஸார் சந்தேகிக்கின்றனர்

பொலிஸாரும் பொதுமக்களும் நேற்று மாலையிலிருந்து குறித்த வயோதிப பெண்ணை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது,  ரயில் பாலத்திலிருந்து  200 மீற்றர் தூரத்தில் மகாவலி ஆற்றுக் குழியிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது

சடலம் பிரேத பரிசோதணைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணை இடம்பெறுவதாக, நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்

(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  - எம்.கிருஸ்ணா)


Add new comment

Or log in with...