கிணற்றில் வீழ்ந்த இளம் பெண் மரணம்

வவுனியா, செட்டிகுளம் துடரிக்குளம் பகுதியில் கிணற்றில் வீழ்ந்த அரசாங்க ஊழியரான இளம் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

நேற்றையதினம் (02) இரவு அவரது வீட்டுக் கிணற்றில் வீழ்ந்துள்ளார்.

அதனை அவதானித்த உறவினர்கள், அயலவர்களின் உதவியுடன்  அவரை மீட்டு   வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், குறித்த பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில்  செட்டிகுளம் பிரதேச சபையில் பணியாற்றும் திருக்கேதீஸ்வரநாதன் கலைவாணி (21) என்ற பெண்ணே இவ்வாறு  மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(வவுனியா நிருபர்)


Add new comment

Or log in with...