விதிமுறைகளை பின்பற்றாத பஸ்கள் மீது நடவடிக்கை

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களில் சேவையில் ஈடுபட்டு வரும்  பஸ்களில், சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாத நிலையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார ஆலோசனைகளை பின்பற்றாது, பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராகவே இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 


Add new comment

Or log in with...