அட்டாளைச்சேனையில் முஅத்தின் மார்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

தேசிய ஊடக முன்னணியின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் பள்ளிவாசலில் கடமை புரியும் முஅத்தின் மார்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (30) தேசிய ஊடக முன்னணியின் தவிசாளர் எம்.ஐ.எம்.றியாஸ்  தலைமையில் அட்டாளைச்சேனை ஊடக இல்லத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். ஜுனைதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

தேசிய ஊடக முன்னணியின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ அமைப்பின் பிரதம ஆலோசகருமான வைத்தியக் கலாநிதி கே.எல்.எம். நக்பரின் வழி நடத்தலும் மற்றும் ஆலோசனைக்கமைவாகவும், அவரது ஏற்பாட்டில் இச் செயற்பாடு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது கொரோனா தொற்று நோயிலிருந்து  பாதுகாப்பு பெறும் நோக்கில் தேசிய ஊடக முன்னணியின் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கைகழுவும் திரவம் அன்றைய தினம் பிரதம அதிதிக்கு வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தேசிய ஊடக முன்னணியின் உப தவிசாளர் எம்.ஏ.எம்.றமீஸ்,பொதுச் செயலாளர் பைஷல் இஸ்மாயில், நிதிப் பணிப்பாளர் ஏ.எல்.றமீஸ்,பிரதி அதிபர் எம்.ஐ.ஹாசீம்,அட்டாளைச்சேனை வை.எம்.எம்.ஏ.உபசெயலாளர் ஏ.எம்.சுலைமாலெப்பை,சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.ரீ.ஜமால்டீன் உட்பட பணிப்பாளர் சபையினர் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...