மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று; எண்ணிக்கை 5 ஆக உயர்வு

மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று; எண்ணிக்கை 5 ஆக உயர்வு-3 More Coronavirus Cases Identified

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூன்று நோயாளிகள்அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கந்தக்காடு மையத்தில் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்ட இருவர் மற்றும் அண்மையில் ஜேர்மனியிலிருந்து வந்த ஒருவர் ஆகிய மூவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் இருவர் அங்கொடையிலுள்ள தொற்று நோய் வைத்தியசாலையிலும், மற்றையவர் பொலன்னறுவை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய,

  • ஜேர்மனியில் இருந்து நாடு திரும்பிய 41 வயதான ஆண் - IDH வைத்தியசாலையில்
  • இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்த  37 வயதான ஆண் - பொலன்னறுவை வைத்தியசாலையில்
  • இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்த  43 வயதான ஆண் - IDH வைத்தியசாலையில்

அந்த வகையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே கடந்த புதன்கிழமை (11) 52 வயதான சுற்றுலா வழிகாட்டி ஒருவரும், அதனைத் தொடர்ந்து நேற்றையதினம் (12) அவருடன் தங்கியிருந்த 44 வயதான நபர் ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...