Thursday, March 12, 2020 - 11:35am
ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து 203 பேர் இன்று (12) அதிகாலை வருகை தந்துள்ளனர்.
இவர்கள் இன்று அதிகாலை 5.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.
அவர்கள் 15 பஸ் வண்டிகளில் பொலன்னறுவை கந்தக்காடு மற்றும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Add new comment