Friday, February 14, 2020 - 6:00am
குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், மாவத்தகம பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவருமான முஹம்மட் ரிபாழ், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனாவில் இணைந்துள்ளார். வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம் முஸம்மிலுக்கு இவர் ஆதரவு வழங்கவுள்ளார்.
குருநாகல் மாவட்ட சிங்கள வர்த்தக சங்கம் மற்றும் முஸ்லிம் வர்த்தசங்க உறுப்பினர்களுடன் ஆளுநர் நடத்திய சந்திப்பில் கலந்து கொண்ட ரிபாழ்,எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆளுநர் முஸம்மிலின் வெற்றிக்கு உழைக்கும் பொருட்டு லங்கா பொதுஜனப் பெரமுனவில் இணைந்து கொண்டார்.இவர்
ஐக்கிய தேசிய கட்சியின் மாவத்தகம பிரதேச சபை எதிர்க்கட்சி தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment