103 பேர் குணமடைந்துள்ளனர்
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 6,000 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் 132 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
106 காணப்பட்ட உயிர்ப்பலி எண்ணிக்கை, நேற்று (28) இறுதியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி பலியானோரின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. இக்கணக்கெடுப்பின்படி, சீனாவின் ஹுபேயில் 25 பேரும் ஹெனானில் ஒருவரும் என 26 பேர் உயிரிழந்துள்ளதாக அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 1,459 பேர் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,974 ஆக அதிகரித்துள்ளதாக, சீன சுகாதார ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் கொரேனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 103 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment