எவ்வித குரல் பதிவுகளும் சமர்ப்பிக்கப்படவில்லை

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவால் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய எவ்வித குரல் பதிவுகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லையென பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகரின் அறிவிப்பு நேரத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 2020 ஜனவரி 21ஆம் திகதி தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய குரல் பதிவுகளை சபையில் சமர்ப்பிப்பதாக கூறியமைக்கமைய நேற்றைய தினத்தில் (நேற்று முன்தினம்) அந்த குரல் பதிவுகள் பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இருந்தபோதும் அவ்வாறான குரல் பதிவுகள் எதுவும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கையளிக்கப்படவில்லை என்பதனை இந்த சபைக்கு அறிவிக்கின்றோம் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...