ஐ.தே.க.தலைமைத்துவம் தொடர்பில் இன்று தீர்க்கமான முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தமாக இறுதி  தீர்மானம் எடுக்கும் வகையில் விசேட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம்  இன்று (16) இடம்பெறவுள்ளது.

இன்று மாலை 5.00 மணியளவில் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் இடம்பெறுமென, பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

இதற்கிடையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களின் பங்களிப்புடன் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...