உலகத் தமிழர் வம்சாவளி ஒன்று கூடல் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதனை உலகத் தமிழ் வர்த்தகச் சங்கம், உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதில் சிறப்பு அழைப்பாளராக இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சாதனை தமிழர்கள், சாதனை தமிழச்சிகள் என்ற பெயரிலான விருதுகளை வழங்கினர்.
இந்நிலையில், தமிழக பயணத்தின் ஒருபகுதியாக சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
இலங்கையில் தற்போது தமிழர்களின் அரசியல் நிலை குறித்து இந்த சந்திப்பின்போது ரஜினியிடம் பேசினார். அப்போது, ரஜினிகாந்த் இலங்கைக்கு விரைவில் வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
Add new comment