பாராளுமன்றக் குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள்

இன்று கலந்துரையாடல்

கோப் குழு உட்பட பாராளுமன்றக் குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (07) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தற்போது வெற்றிடமாகவுள்ள பொது நிதிக்குழு, பொதுக் கணக்கு குழு உள்ளிட்ட குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் இக்கலந்துரையாடலில் இறுதிக்கட்ட உடன்பாட்டை எட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று (07) பிற்பகல் 1.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு வைபவ ரீதியாக கடந்த டிசம்பர் 03ஆம் திகதி ஆரம்பமானதோடு, இதன்போது புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் இன்று (07) வரை ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...