உலக அழகி கரோலினுக்கு அமைச்சர் பவித்ரா வாழ்த்து

உலக திருமதி அழகியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கரோலின் ஜூரிக்கு சுகாதார மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகிப் போட்டி இம்முறை அமெரிக்காவில் நடைபெற்றது. 51 நாடுகளைப் பிரதிதிநிதித்துவப்படுத்தி போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் இலங்கை பெண்மணியான கரோலின் ஜூரி உலக திருமதி அழகியாக வெற்றிபெற்றுள்ளார். 2 மற்றும் 3ம் இடங்கள் முறையே அயர்லாந்து மற்றும் வேர்ஜின் தீவு நாடுகளுக்குக் கிடைத்துள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையில் நடைபெற்ற திருமதி அழகிப் போட்டியில் கரோலின் ஜூரி முதலாமிடத்தைப் பெற்றிருந்தார். இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கான உலக திருமதி அழகியாக வெற்றிபெற்ற வியட்நாம் நாட்டைச் சேர்ந்த ஜெனிபர் லே கரோலினுக்கான உலக அழகி கிரீடத்தை சூடியமை குறிப்பிடத்தக்கது.

1984ம் ஆண்டு உலகத் திருமதி அழகிகள் போட்டியில் ரோஸி சேனாநாயக்க உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது என்றும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...