Friday, June 21, 2019 - 9:42am
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி வலைகள் 24 ஐ கடற்படையினர் நேற்று (20) கைப்பற்றியுள்ளனர்.
100 மீற்றர் நீளம் கொண்ட தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு ஏரி அமைந்துள்ள பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோதே, தடை செய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்டுள்ள மீன்பிடி வலைகள் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.
Add new comment