பெல்வத்த டெய்ரியின் பிரீமியம் வகை ஐஸ்கிரீம் அறிமுகம்

உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட பாலை மாத்திரமே பயன்படுத்தி எந்தவித பதப்பொருட்களோ அல்லது செயற்கை நிறங்களோ அல்லது சுவையூட்டிகளோ பயன்படுத்தப்படாது தயாரிக்கப்படும் பெல்வத்த டெய்ரியின் பிரீமியம் வகை ஐஸ்-கிரீமானது தற்போது சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஏலக்காயுடனான தேங்காய், ஏலக்காயுடனான கோப்பி போன்ற உள்ளூர் சுவைகளை உள்ளடக்கும் அதேநேரத்தில் சர்வதேச சுவைகளான புளுபெரி மற்றும் பட்டர்ஸ்கொட்ச் ஆகியவற்றையும் இந்த புதுவரவுகள் உள்ளடக்குகின்றன. ஏற்கனவே காணப்படும் சுவைகளான வெனிலா, சொக்கலேட், ப்ருட் அன்ட் நட், பனானா, மன்கோ மற்றும் ஸ்டோபரி போன்ற சுவைகளையும் இந்த புதிய வரவுகள் நிறைவு செய்கின்றன.

இப்புதிய சுவைகளை நிறுவுதலின்போது பெல்வத்த டெய்ரியின் நிர்வாக முகாமையாளர் அக்மால் விக்ரமநாயக்க கருத்து தெரிவிக்குகையில், “உலகின் எப்பகுதியில் நீங்கள் காணப்பட்டாலும் ஐஸ்-கிரீமானது எமது வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ஒரு விடயமாக காணப்படுகின்றது. பெல்வத்தவில் நாம் பழக்கப்பட்ட சுவைகளை எமது ஐஸ்-கிரீம் வகைகளிற்கு உட்புகுத்த நாம் முயற்சி செய்கின்றோம். எமது மக்கள் பாற்செழுமை நிறைந்த 100% உள்ளூர் தயாரிப்பை தழுவிக்கொள்வதனால் இப்புதிய சுவைகளினது நிறுவுதலானது எமக்கு மிகவும் உற்சாகமூட்டுகின்றதாக காணப்படுகின்றது.” என்று குறிப்பிட்டார்.

பெல்வத்த டெய்ரியானது 11 புதிய சுவைகளை மேம்படுத்தவும் அவற்றை உள்ளூர் சந்தைக்கு அறிமுகப்படுத்தும் வகையிலும் தற்போது பரிசோதித்து வருகின்றது. வருகின்ற குறிப்பிட்ட சில மாதங்களினுள் புதிய இரண்டு சுவைகள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பிரீமியம் வகைகளின் கப் மற்றும் டப்பாக்களின் பெரும் உற்பத்தியானது 2020ம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும்.


Add new comment

Or log in with...