கைது செய்வதை தடை செய்ய கோரி கரன்னாகொட மனு

இரகசிய பொலிஸாரிற்கு தன்னை கைது செய்வதை தடுப்பதற்கு உத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரி கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவின் பொலிஸ் மாஅதிபர், இரகசிய பொலிஸ் பணிப்பாளர், சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

11 இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே பல கடற்படை அதிகாரிகள் கைதாகியுள்ள நிலையில் முன்னாள் கடற்படை தளபதியையும் கைது செய்ய தயாராவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இந்த நிலையிலே தன்னை கைது செய்வதை தடுக்கக் கோரி அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.


Add new comment

Or log in with...