தாய்க்கு பக்கத்தில் பிள்ளையின் எலும்புக்கூடு

மன்னார் 'சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் நேற்று (30) திங்கட்கிழமை 43 ஆவது தடவையாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது மனித புதைகுழி அகழ்வில் மனதை பதற வைக்கும் வகையில் தாய் ஒருவரும் அவர் அருகே பச்சிளம் குழந்தை ஒன்றின் மனித எச்சமும் மீட்கப்பட்டுள்ளது.

-மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் நேற்று காலை 43 ஆவது தடவையாக ஆரம்பிக்கப்பட்டது.

மனித புதைகுழி அகழ்வின் போதும் சந்தேகத்திற்கு இடமான ஒரு முதிர்ந்த மனித எச்சமும் அதன் அருகே சிறிய எழும்புகளை கொண்ட மனித எச்சமும் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த இரு மனித எச்சங்களையும் சுழ்ந்திருந்த களிமன்கள் அகற்றப்பட்டபோது அருகருகே புதைக்கப்பட்டிருக்கும் தாயும் பிள்ளையும் என சந்தேகிக்கப்படுகின்ற வகையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட இரு மனித எலும்புக்கூடுகள் தொடர்பாகவும் எந்த வித துல்லியமான கருத்துக்களையும் தங்களால் கூற முடியாது எனவும் முழுமையான பரிசோதனைகளின் பின்னரே கருத்துக்களை தெரிவிக்க முடியும் எனவும் மேற்படி அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களை உடற்கூற்று பரிசோதனைக்காக அமெரிக்காவில் உள்ள புளோரிடாவுக்கு அனுப்பி வைப்பதற்கான பரிந்துரையை நீதிமன்றத்திற்கு தாங்கள் முன் வைத்துள்ளதாகவும், இதுவரை எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.

 எஸ்.றொசேரியன் லெம்பேட்


Add new comment

Or log in with...