Thursday, July 27, 2017 - 6:35am
கிணற்றில் வீழ்ந்த ஒருவரை காப்பாற்ற முயற்சி செய்த சம்பவத்தில் மூன்று பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கிரியுல்ல, அத்துருவெல பிரதேசத்தில், நேற்று (26) இரவு திருமண வீடொன்றுக்குச் சென்ற ஒருவர், திருமண வீட்டு வளாகத்தில் பலகையால் மூடி வைக்கப்பட்டிருந்த கிணற்றுக்குள் தவறுதலாக வீழ்ந்துள்ளார். இதனையடுத்து, குறித்த நபரை காப்பாற்றுவதற்காக, இருவர் கயிறு மற்றும் ஏணியின் உதவியுடன் அக்கிணற்றிற்குள் இறங்கியுள்ளனர். இதன்போது, அவ்விருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனையடுத்து அவ்விடத்திற்கு வந்த ஏனையோர், அம்மூவரையும் கிணற்றிலிருந்து வெளியேற்றி தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர்கள் மரணமடைந்துள்ளனர்.
மரணித்தவர்கள் தம்பதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த, மஹிந்த கருணாரத்ன (39), நிசால் பிரசாத் அதிகாரி (38), அஜந்த லால் குமார (41) ஆகியோராவர்.
சடலங்கள் தற்போது தம்பதெனிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரதேச பரிசோதனைகள் இன்று (27) இடம்பெறவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரியுல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Add new comment