பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை கரப்பந்து அணி

நேபாளத்தில் நடைபெற்று வரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் கடந்த வியாழனன்று (25) நடைபெற்ற 5 முதல் 8ஆம் இடங்களை உறுதிசெய்யும் போட்டியில் இலங்கை அணி 3–0 என வெற்றியை பதிவுசெய்தது.

பங்களாதேஷ் மகளிர் அணிக்கு எதிரான இந்தப் போட்டியின் முதல் செட்டை இலங்கை அணி இலகுவாக கைப்பற்றியது. ஆரம்பத்திலிருந்து முன்னிலையை காட்டிய இலங்கை மகளிர் அணி 25–16 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றியது.

தொடர்ந்து அபாரமாக ஆடிய இலங்கை மகளிர் அணி இலகுவான முறையில் முன்னேறியது. இரண்டாவது செட்டை 25–15 எனவும், மூன்றாவது செட்டை 25–07 எனவும் இலகுவாக கைப்பற்றி 3–0 என வெற்றியை பதிவுசெய்தது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 5ஆவது இடத்தை தீர்மானிக்கும் போட்டியில், இன்று (27) கிரிகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...