- சில இடங்களில் 50 மி.மீ. வரையான ஓரளவு பலத்த மழை
- கிழக்கு, மத்திய, ஊவாவில் மாலையில் அல்லது இரவில் மழை
இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யும் வாய்ப்பு காணபபடுகின்றது.
கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
Add new comment